புதிய ஆலய திருநிலைப்படுத்துதல் விழா-சாத்தூர் குருசேகரம், தசுலுதி சீயோன் ஆலயம், வெற்றிலையூரணி.

30-1-24 செவ்வாய்கிழமை சாத்தூர் குருசேகரம்,  தசுலுதி சீயோன் ஆலயம், வெற்றிலையூரணி. புதிய ஆலய திருநிலைப்படுத்துதல் விழாவை தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் ஜெபித்து திருநிலைப் படுத்தினார்கள். கனம் ஆலோசனை சங்க செயலர் திரு.R. தங்கப்பழம் அவர்கள் ஜெபித்து கல்வெட்டை திறந்து வைத்தார்கள். இந்த நிகழ்வில் தசுலுதி கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்களும்,  துணைத்தலைவர் மறைதிரு.J.ஸ்டேன்லி தேவக்குமார் ஐயா, உயர்கல்விக்கழகத் தலைவர் மறைதிரு.V.A. குணாளன் பாக்கியராஜ் ஐயா அவர்களும், தென் மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர், ஆயர் பெருமக்கள் மற்றும் சபையார் பரிசுத்த ஆராதனையில் திரளாக கலந்துக் கொண்டு கடவுளின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டனர்.






கருத்துகள்