21-2-2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு,மணல்மேடு குருசேகரம், கள்ளிக்காடு கிராமத்தில் தசுலுதி நல்மேய்ப்பர் ஆலயம் திருநிலைப்படுத்துதல் விழா நடைபெற்றது. இந்த ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஜெபித்து திருநிலைப்படுத்தினார்கள். கனம் ஆலோசனை சங்க செயலர் அவர்கள் கல்வெட்டினை திறந்து வைத்தார்கள். இந்த நிகழ்வில் தசுலுதி துணைத்தலைவர், கல்வி கழகத் தலைவர்கள், இணைப்பொருளாளர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத்தலைவர்கள், ஆயர் பெருமக்கள், சபைசங்க உறுப்பினர்கள், சபையார் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக