கடவுளின் பேரருளால் ஊத்துக்குளி குருசேகரத்தில் ஒரு நாள் இளைஞர் கூடுகை Align With God என்ற கருப்பொருளில் ஊத்துக்குளி கிறிஸ்தவ இளைஞர் இயக்கத்தின் (CII) சார்பாக இன்று (26.01.2025) நடைபெற்றது இதில் காணொளி வழியாக மகாகனம் பேராயர் ஐயா அவர்கள் இந்த ஒரு நாள் வாலிபர் கூடுகையை ஆசீர்வதித்து ஜெபித்து தொடங்கி வைத்தார்கள்.. TELC துணைத்தலைவர் மறைதிரு. ஸ்டேன்லி தேவக்குமார் ஐயா அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். TELC இளைஞர் இயக்க பொதுச்செயலாளர் மறைதிரு . ஜோஷ்வா நிமலன் ஐயா அவர்கள் காணொளி வழியாக வாழ்த்தி ஆசீர்வதித்தார்கள். இந்த கூடுகையில் ஆனைமலை குணசேகர ஆயர் / தலைவர் மறைதிரு. கார்த்திக் ஐயா அவர்கள் ஆண்டவருடைய வார்த்தையை பகிர்ந்து கொண்டார்கள்... நூற்றுக்கும் மேற்பட்ட வாலிப பிள்ளைகள் இந்த கூடுகையில் கலந்து கொண்டு கடவுளின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக