திருச்சி, தஞ்சை மறைமாவட்ட ஆயர் அருளுரை ஆயத்த கூடுகை

11-11-25 தரங்கைவாசம், திருச்சி, ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில், திருச்சி, தஞ்சை மறைமாவட்ட ஆயர்களுக்கான கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு அருளுரை ஆயத்த கூடுகை நடைபெற்றது. இந்த கூடுகையை திருச்சி, தஞ்சை மறைமாவட்ட தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கூடுகையில் திருச்சி, தஞ்சை மறைமாவட்ட ஆயர் பெருமக்கள் மற்றும் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் கலந்து கொண்டனர். நிறைவாக தசுலுதி துணைத்தலைவர் அவர்கள் வாழ்த்தி, ஜெபிக்க , தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் ஆசிர்வாதத்தோடு கூடுகை நிறைவு பெற்றது.

கருத்துகள்